முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இனி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவோ அல்லது தேசிய பட்டியல் ஊடாக உள்வரவோ மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தேசிய விடயங்களில் கட்சியின் ஆலோசகராக மாத்திரம் செயற்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மாபெரும் கூட்டணி ஒன்றை உருவாக்க முன்வருமாறு தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேயவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here