ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) துணைத் தலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (14/02/2025) நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு முக்கிய அரசியல் பிரமுகரான திசாநாயக்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான மறைந்த காமினி திசாநாயக்கவின் மகனாவார்.








