நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி, மஹியாவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
மேலும் பொருளாதாரம் வரம்பில் சிக்கியுள்ளது. ஏன் இவர்களுக்கு மட்டும் இலஞ்சம் வாங்கும் அளவுக்கு மட்டுமே பொருளாதாரம்? நாம் இதை விட பொருளாதாரத்தை பெரிதாக்குவோம். தனக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் செயற்படும் ஒரு சிறந்த சமூகம், ஒரு சிறந்த கல்வி மாற்றத்தை உருவாக்குவோம். இப்போது சிறுபோகமும் முடிந்துள்ள நேரத்தில், நாங்கள் நாட்டை பொறுப்பேற்று கட்டியெழுப்ப தயாராகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.







