கண் கருவளையம் (dark circles) நீங்க சில இயற்கையான சிகிச்சை முறைகள் உள்ளன. உங்கள் உடல்நலமும், வாழ்க்கை முறைபாடும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாம் பலரும் எதிர்கொள்கிற ஒரு பொதுவான அழகு பிரச்சனை என்றால், அது கண் கருவளையம்.
இது தூக்கமின்மை, மன அழுத்தம், நீர்சத்து குறைபாடு போன்ற காரணங்கள் இந்த கருப்பு வளையங்களை உருவாக்கும்.
இது முகத்திற்கு சோர்வான தோற்றத்தை தருவதோடு, நம் ஆரோக்கியத்தையும் பாதிப்பது போல் தோன்றச் செய்கிறது.
இந்த பிரச்சனையைச் சமாளிக்க செயற்கையான கிரிம்கள், காஸ்மெடிக்ஸ் தேவையில்லை. உங்கள் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய இயற்கை வழிமுறைகள் இதற்கு சிறந்த தீர்வாக இருக்க முடியும்.
கண் கருவளையம் நீங்க, இயற்கையான 5 எளிய வழிகள்………..
– தினமும் குறைந்தது 7–8 மணி நேரம் தூங்குவது முக்கியம். தூக்கமின்மையால் தான் பெரும்பாலும் கண்களுக்கு கீழே கருவளையங்கள் தோன்ற ஆரம்பிக்கிறது.
– உடலில் நீர் சத்தை பராமரிக்க, தினமும் 8–10 கப் தண்ணீர் குடிக்கவும். இரும்புச்சத்து, வைட்டமின் K, C மற்றும் E போன்றவை உள்ள உணவுகள் (பசலைக்கீரை, நார்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், முட்டை) உதவும்.
– பாதாம் எண்ணெய் சில சொட்டுக்கள் எடுத்து, இரவு தூங்கும் முன் கண் சுற்றுப் பகுதியில் மெதுவாக தேய்த்து விடுங்கள். அதிகமாக ஸ்கிரீன் பார்த்தல், மேக்கப்பைப் போட்டு தூங்குவது, புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் போன்ற தீய பழக்கங்கள் இருப்பதும் கருவளையங்களுக்கு காரணமாக அமையும். மனஅழுத்தமும் கருவளையம் உருவாக காரணமாக இருக்கலாம். உங்கள் உடல் ஆரோக்கியம் சரியாக இருந்தால், கண் கருவளையமும் குறையும்.

– வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கு துண்டுகளை கண்களில் 10–15 நிமிடம் வைத்துப் பாருங்கள். வெள்ளரிக்காயை நறுக்கி குளிர்ந்த நிலையில் 10–15 நிமிடம் கண்களுக்கு மேல் வைக்கவும். தினமும் 1 அல்லது 2 முறை செய்தால் கருவளையம் குறையும். காரணம், வெள்ளரிக்காயில் anti-inflammatory மற்றும் skin-lightening இயற்கை பண்புகள் உள்ளன.

– சிறிய உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பஞ்சால் நனைத்து கண் சுற்றுப் பகுதியில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். காரணம், உருளைக்கிழங்கில் bleaching பண்புகள் உள்ளதால் கருப்புத்தன்மை குறையும்.









