கம்பஹா கவுடன்கஹ பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் கம்பஹா – மாகோவிட்ட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உந்துருளியில் பிரவேசித்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.







