யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் அதிகளவான சாளை மீன்கள் மீனவர்களுக்கு கிடைத்துவருகின்றன.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் மீன்களின் பிடிபாடு மிக குறைந்து காணப்பட்ட நிலையில் சில நாட்களாக மீன்களின் பிடிபாடு அதிகரித்துள்ளமையால் மீனவர்களின் வாழ்வாதாரம் வழமைக்கு திரும்பியுள்ளது.

நாகர்கோவில் கரைவலை தொழிலாளர்களுக்கே நாளாந்தம் அதிகளவான சாளை மீன்கள் கிடைத்துவருவதுடன் வடமராட்சி கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் குறித்த மீன் பிடிபாடு அதிகரித்துள்ளது.

சந்தைகளில் சாளை மீன்களின் பெறுமதி ஒரு கிலோ 150 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here