ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோயினால் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரத்தில் மாத்திரம் 107 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் குரங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை டென்மார்க்கைச் சேர்ந்த, ‘பவாரியன் நார்டிக்’ எனும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ளது.
பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனம் குறித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.








