சீனாவிடமிருந்து அன்னிய நேரடி முதலீடாக பெறப்பட்ட ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முதலீடு தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்திலும் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலத்திலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் இதே முதலீடு செய்யப்பட்டதாகவும், ஆனால் ஜே.வி.பி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார்.
எனினும், தாமதமானாலும் முதலீட்டுத் திட்டத்தை நாட்டுக்குக் கொண்டுவருவதில் மகிழ்ச்சியடைவதாக திரு நாமல் ராஜபக்ஷ கூறுகிறார்.
“அதே முதலீடு 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் போது விவாதிக்கப்பட்டபோது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் இந்தத் திட்டத்தை மீண்டும் செய்ய முயற்சித்தபோது, இதை சீனக் காலனியாக மாற்றப் போகிறோம் என்றார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும் அந்த அமைச்சரவை பத்திரத்தை போட்டார்.
அன்று சீனாவின் பிரேரணைகளை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டுள்ளார். தாமதமாக இலங்கையில் மிகப்பெரிய முதலீட்டை கொண்டு வந்ததில் மகிழ்ச்சி.”அவர் கூறுகிறார்.








