பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அனைவரும் கைக்கோர்க்க வேண்டுமென ஐக்கிய ஜனநாயக குரலின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பசறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற சதித்திட்டங்களை ஒற்றுமையால் முறியடிக்க வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






