தைப் பொங்கல் பண்டிகை, சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இலங்கை ரயில்வே சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது.
2025 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு ரயில்கள் இயக்கப்படும்.
கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை 7:30 PM, 10, 12, 14, 17, 19, 24, 26, 31 ஜனவரி ; பிப்ரவரி 2, 4
பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை: 10, 12, 14, 17, 19, 24, 26, 31 ஜனவரி 7:40 PM ; பிப்ரவரி 2, 4
கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை: காலை 5:30, 10, 13, 14, 15, 17, 20, 24, 27, 31 ஜனவரி ; பிப்ரவரி 3, 4 ஆகும்.








