ஹம்பேகமுவ காவல் பிரிவுக்குட்பட்ட கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் காட்டு யானையின் உடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
யானைக்குப் பலமுறை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டும் யானை உயிரிழந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் யானை மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக ஹம்பேகமுவ காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.









