Tuesday, July 28, 2026
No menu items!

யானை

யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு..!!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி  நபரொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை(30) காலை இடம்பெற்றுள்ளது. தம்பியன் என்றழைக்கப்படும் தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரவு வயலுக்குச் சென்றுவிட்டு காலை வீடு திரும்பும் வேளையில் தோட்டம் ஒன்றிற்குள் மறைந்திருந்த யானை குறித்த நபரை தாக்கியதாக விசாரணைகளில்...

நாட்டில் அதிகரித்துவரும் யானைகளின் மரணம்..!!

ஹம்பேகமுவ காவல் பிரிவுக்குட்பட்ட கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் காட்டு யானையின் உடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. யானைக்குப் பலமுறை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டும் யானை உயிரிழந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் யானை மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக ஹம்பேகமுவ காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிணற்றில் தவறி விழுந்த இரு யானைகள்: ஒன்று உயிருடன் மீட்பு, மற்றொன்று பலி!

வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் இரண்டு யானைகள் தவறி விழுந்ததில், ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றொன்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கிராம அலுவலருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவர் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும், பொலிசாருக்கும் அறிவித்தார். வனத்துறையினர் பெரும் முயற்சியுடன் ஒரு...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 13 யானைகள் சிகிச்சையில் – வனஜீவராசிகள் திணைக்களம் தகவல்!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 13 யானைகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 'பாத்திய' என்றழைக்கப்படும் யானை உயிரிழந்ததை அடுத்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வனவிலங்கு சுகாதார பணிப்பாளர் தாரக பிரசாத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, அனுராதபுரத்தில் 7 யானைகளும், பொலன்னறுவையில்...

 உந்துருளியில் பயணித்த ஒருவர் யானையுடன் மோதி உயிரிழப்பு!

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் கன்னியா பகுதியில் உந்துருளியில் பயணித்த ஒருவர் யானையுடன் மோதுண்டு உயிரிழந்தார். வவுனியா – புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது.   <!-- -->

காட்டு யானை தாக்கியதில் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று இரவு (01/03/2025) குறித்த தாயாரும் பிள்ளைகளும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டுக்குள் புகுந்த யானை வீட்டை தாக்கி சேதப்படுத்தி இருந்ததோடு சத்தம் கேட்டு வெளியில் ஓடிவந்த குறித்த பெண்ணையும் தங்கியிருந்தது. இதன் போது...

உயிரிழந்த நிலையில் யானை மீட்பு – காணியின் உரிமையாளர் கைது..!

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாங்குளி கிராமத்தில் உள்ள வயலில் இருந்து உயிரிழந்த நிலையில் யானை ஒன்று நேற்று புதன்கிழமை (19/03/2025) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யானை 18 வயதுடையது என தெரியவந்துள்ளது. நேற்று புதன்கிழமை (19/03/2025) அப்பகுதிக்குச் சென்றவர்கள் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை அவதானித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு...

பாரவூர்த்தி மோதி தந்தத்தை இழந்த யானை கண்டுபிடிப்பு!

பாரவூர்த்தி மோதி தந்தத்தை இழந்த "சுமேதா" என்ற யானையை வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மரதன்கடவல - லபுனொருவ பகுதியில் கண்டுபிடித்ததாகச் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.  

உயிரிழந்த நிலையில் ஆண் யானை மீட்பு..!

மட்டக்களப்பு போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட பிரிவிற்குட்பட்டதும் , வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள பிரிவிற்குரிய திக்கோடையில் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் சுமார் 20-25 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுகிறது. வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் காட்டுயானைகள் அட்டாகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. முறையான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாமல் காணப்படுவதனால்...

காட்டுயானையுடன் மோதிய வாகனம் – படுகாயமடைந்த யானை..!

வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன், யானையும் படுகாயமடைந்தது. குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (17.12.2024)  இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சி நோக்கி மீன்களை ஏற்றிச்சென்ற கூலர் ரக வாகனம் பிரதான வீதியில் நின்றிருந்த காட்டுயானையுடன் மோதியுள்ளது. இதனால் வாகனம்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img