இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (26) களனி சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நீர்கொழும்பு போலவலான மடமா வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 2 இலட்சம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சோதனை நடவடிக்கை இராணுவ புலனாய்வு மற்றும் அதிரடிப்படை இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here