கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளத்தின் கீழான 15650 ஏக்கர் நிலப்பரப்பில் 2024ம் ஆண்டு சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று (08.08) பெய்த திடீர் மழை காரணமாக காயவிடப்பாட்டிருந்த நெற்கள் மழையில் நனைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.









