பிரேசிலில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் சிறு குழந்தையொன்றும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லைன் மற்றும் பிரேசில் நகருக்கு அருகில் பேருந்தின் டயர் வெடித்ததன் காரணமாக பேருந்து பாரவூர்தியுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஸ்ஸின் பின்னால் வந்த மேலும் பல வாகனங்களும் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டு நாட்டில் வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.








