தாய்லாந்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பிரவிட் வோங்சுவோனி பிரபல பெண் ஊடகவியலாளர் ஒருவரை தலையில் பலமுறை அடித்து தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவலாகியுள்ளது.
இந்நிலையில் அவரிடம் தாய்லாந்து நாடாளுமன்றம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.
குறித்த ஊடகவியலாளர் புதிய பிரதமர் குறித்து கேள்வி கேட்பதற்கு முயன்றபோதே அவர் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாட்டில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.







