எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 8 பேரில் ஐந்து பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உள்ளூராட்சி நிறுவனங்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க உடன்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.








