பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த ‘குஷ்’ கஞ்சாவை வைத்திருந்த இரண்டு இலங்கை பிரஜைகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அம்பாறையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரும் அம்பாந்தோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து நாட்டை வந்தடைந்த கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் 6.63 கிலோகிராம் ‘குஷ்’ கஞ்சா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








