Tuesday, April 28, 2026
No menu items!

கஞ்சா

2025ல் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 1.8 இலட்சம் பேருக்கு மேல் கைது – காவல்துறை தகவல்!!!

2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் அக்டோபர் 15 வரை, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 1,81,554 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் மிகப் பெரிய அளவில் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 1,426 கிலோ 543 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன், 56,902 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 14,292 கிலோ 393...

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி – மருத்துவ சங்கத்தின் கடும் எதிர்ப்பு!

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி வழங்கும் அரசாங்கத் தீர்மானத்தை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இலங்கை மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய அனுமதி கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறானது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டிலிருந்து...

ஒரே வாரத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் கைது!!

நாடு முழுவதும் கடந்த வாரம் நடத்திய சோதனைகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இயங்கும் போதைப்பொருள் வலையமைப்பை அடையாளம் கண்டு அடக்கவும், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைதுசெய்யவும் நாடு முழுவதும் பொலிஸார் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஜூலை...

20 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய பெண்..!

20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இந்தக் கைது நடைபெற்றுள்ளது. நேற்று அதிகாலை வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கேரளா கஞ்சாவை, விசேட அதிரடிப் படையினரும் தர்மபுரம் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில்,...

சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி புளியம் பொக்கணை பகுதியில் வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்துச் செல்லப்பட்ட ஒரு கோடி அறுபது  இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதுடன் அதனை மறைத்துச் சென்ற வாகனமும் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 16ஆம் திகதி புதன்கிழமை பகல் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா கடத்திய வாகனம்...

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று இரவு முன்னெடுக்கப்பட்டது. 19 வயதான குறித்த சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டது. மேலதிக...

உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர் கஞ்சாவுடன் கைது..!

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கருவலகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கருவலகஸ்வெவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் புத்தளம், கருவலகஸ்வெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் வீதி, சிறாம்பியடி பகுதியில் வசிக்கும் நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ...

பெருந்தொகையான கஞ்சா மீட்பு – சந்தேகநபர்கள் மாயம்..!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா இன்று சனிக்கிழமை (3/22/2025) கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த  கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்...

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை – இளைஞன் கைது..!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் வண்ணார் பண்ணை பகுதியில் வீடொன்றில் வைத்து, மாணவர்களை இலக்கு வைத்து மாவா பாக்கினை இளைஞன் ஒருவர் விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு...

யாழில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்..!

யாழ்  வல்வெட்டித்துறையில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியை பொலிஸார் நிறுத்த  உத்தரவிட்டும் ஓட்டுநர் நிறுத்த மறுத்துள்ளார். வாகனத்தை நிறுத்த மறுத்த நிலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி  ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பாரவூர்தியில்  மணலில் மறைத்து...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img