இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை கருக்கம்பனை சந்தைக்கு அண்மையாக ஏற்பட்ட விபத்தில் இரு பெண்கள் உட்பட சிறு குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளனர்.
மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார்சைக்கிளின் பின்னால் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பி சென்றுள்ளனர்.
ஆலடி பகுதியில் இருந்து கீரிமலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளையே அதே திசையில் இருந்து வந்தவர்களால் மோட்டார்சைக்கிளால் மோதி விட்டு தப்பி சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








