நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையாற்றும் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக திறைசேரியிலிருந்து ரூபாய் 15 000 உதவித்தொகை வழங்கவும் மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூபாய் 10 000 உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நிவாரணம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை பிள்ளைகளுக்கு ஏற்கனவே ரூபாய் 6000 உதவித்தொகை வழங்கி வருகின்றோம், இது அந்தக் கொடுப்பனவைப் பாதிக்காது.

இதன் மூலம் ஒரு பாரிய பேரழிவை எதிர்கொள்ளும் அளவுக்கு எங்கள் கையிருப்புக்களை வலுப்படுத்தியுள்ளோம்.

தற்போதைய பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம் என  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here