காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகிய ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று(19) இடம்பெற்றுள்ளது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியிலிருந்து கேப்பாபிலவு வீதியால் பாடசாலைக்கு சென்றுக் கொண்டிருந்த போது புதுக்குடியிருப்பு கள்ளியடி பாலத்தடியில் நின்றுக் கொண்டிருந்த யானை வீதியை வழிமறித்து தாக்கியதில் குறித்த ஆசிரியர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி எறியப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் நடனசபாபதி சிவசோதிகணுக்கேணி முள்ளியவளையை சேர்ந்த 28 வயதுடைய உடையார்கட்டு குரவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் என்பதும் குறிப்பிடதக்கது.








