முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2021ஆம் ஆண்டு நியாயமான காரணமின்றி கைது செய்து தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனு, 2026 மார்ச் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (02.10.2025) நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வின் முன் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் ஆரம்ப விசாரணையின் பின்னர், நீதிபதிகள் மனுவை எதிர்வரும் ஆண்டின் மார்ச் 25ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டனர்







