பொதுமக்களிடமிருந்து 4.5 மில்லியன் ரூபாவை நிதி மோசடி செய்ததாகத் தேடப்பட்டு வந்த 31 வயது பெண் ஒருவர் ஹட்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஹட்டன் நீதவான் நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.
பதுளையைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபர், நேற்று ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில் கடன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நிதி ரீதியாக மோசடி செய்ததாக அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.








