மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்த பைசன் காளமாடன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.

போட்டிக்கு அதே நாளில் ரிலீஸ் ஆகி இருந்த பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் ஏற்கனவே 100 கோடியை வசூலில் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது பைசன் திரைப்படம் 10 நாளில் எத்தனை கோடி வசூலித்து இருக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

உலகம் முழுக்க பத்து நாட்களில் 55 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே படக்குழு வெற்றிவிழா நடத்தி இருந்த நிலையில் அதில் பேசும்போது மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித் இருவரும் ஜாதி படங்கள் எடுப்பதை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here