இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதில் பெரும்பாலானவை போலி , தவறான தகவல்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தவறான தகவல்களை பரப்பும் 8 ஆயிரம் கணக்குகளை முடக்க எக்ஸ் தளத்திற்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவையடுத்து அந்த கணக்குகளை எக்ஸ் நிறுவனம் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post Views: 4