90 வகையான மருந்துகளின் விலைகளை உடனடியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால், இந்த முடிவை எதிர்த்து பல மருந்து நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தடைகள் உருவாகியுள்ளன.
சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒரு பிரேரணை முன்வைக்கப்படும், ஆனால் விலைக் குறைப்பு திட்டமிட்டபடி தொடரும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.








