தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களின் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் இன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தார்.
அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த அவர்,
சிலருக்கு தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் காய்ச்சல் பிடித்திருக்கிறது. சில வேட்பாளர் விலக வேண்டும் என்று சொல்கின்றனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.









