பொலன்னறுவை, பகமுன பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை உணவு விஷமானதன் காரணமாக சுமார் 500 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊடக அறிக்கையின்படி, ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதன் பின்னரே சுகவீனமடைந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடல்நிலை சரியில்லாத ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் பகமுன மற்றும் அத்தனகடவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.








