முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக தாம் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

“சம்மன் வந்ததற்கான காரணங்கள் எனக்குத் தெரியவில்லை. நான் உள்ளே சென்று கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இங்கு வருவதே ஒரே வழி. தெரிந்தே பொய் சொன்னவர்களும் உண்டு, ஆனால் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்கு நாங்கள் புரிந்துணர்வுடன் பதிலளிப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here