வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் போது தேவையற்ற பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.
அதேநேரம், அண்மையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமையினால் இந்த முறை வாக்களிப்பின் போது இடதுகையின் ஆட்காட்டி விரலில் மை இடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.








