சிறைச்சாலைக்குள் 25 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுடைய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் மஞ்சுள திலகரத்ன இன்று பிறப்பித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தனது நண்பருக்காக எடுத்துச் சென்ற உணவுப் பாத்திரத்தில் ஹெரோயினை மறைத்து வைத்திருந்தார்.

எவ்வாறாயினும், சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார், அதன் பின்னர் சட்டமா அதிபர் உடமை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.

நீண்ட விசாரணைக்கு பின், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here