Monday, July 6, 2026
No menu items!

K Dilakshan

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்…!

ஈரான் மீது இன்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2ஆவது வீடியோ பதிவில், "இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை இப்போது என்னால்...

ஜனாதிபதிக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு…!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டப் பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என துறைசார் சில தொழிற்சங்கங்கள்...

திடீர் சுகயீனமுற்று உயிரிழந்த மாணவி…!

குருணாகல், கிரியுல்ல , மெத்தேபொல பிரதேசத்தில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவியின் உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்த பாடசாலை மாணவி கடந்த 23 ஆம் திகதி அன்று இரவு உணவிற்காக கிரியுல்ல நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து கோழி பிரியாணி...

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவித்தல்…!

இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. இதன்படி, டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. டிசம்பரில் அனைத்துத் துறைகளுக்கும் மின்சாரக் கட்டணம் 06 வீதம்...

பொதுத் தேர்தல் திகதியில் மாற்றம்…!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக அரச செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாள் குறித்து சில சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து...

யாழில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு…!

யாழ்ப்பாணத்தில் நபரொருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு நீண்ட வருடங்களுக்கு முன்னர் மின்சாரம் தாக்கியிருந்தது. அதன்பின்னர் இவருக்கு இடையியைடே வாந்தி ஏற்படுவது வழமை. கடந்த 25ஆம் திகதியும் காலை 10 மணிக்கு இவருக்கு இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது....

10 கோடி ரூபா பெறுமதியான அம்பர் தொகையுடன் ஒருவர் கைது…!

ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கென்தலியத்தபாலுவ பிரதேசத்தில் 10 கோடி ரூபா பெறுமதியான அம்பர்  (திமிங்கலத்தின் வாந்தி) தொகையுடன் சந்தேக நபரொருவர் மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (25.10.2024) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில்...

தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை..!

தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற வரலாற்றை இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா படைத்துள்ளார். நிமேஷா கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளித்த சோசலிசக் கட்சிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநீக்கம்….!

பமுனுகம பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களைப் பலமாகத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போபிட்டிய, பமுனுகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இரு இளைஞர்கள் திருட்டு சம்பவம் ஒன்று...

விபத்துக்குள்ளான லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனம்…!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமானது என கூறப்படும் டிபெண்டர் வாகனம் நேற்று (25.10.2024) விபத்துக்குள்ளாகியுள்ளது. வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய அனுராதபுரம் வீதியில் தங்கஹமுல சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் பின்னர் பிரதேசவாசிகளுக்கும், டிபெண்டர் வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இரு பிரிவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வாகனத்தில் பல்வேறு...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img