Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சஹாரா பாலைவனம்..!

தென்கிழக்கு மொராக்கோ பகுதியில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழையால்  வெள்ளக்பெருக்கு ஏற்பட்டுள்ளதில் வறண்ட சஹாரா பாலைவனம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  தலைநகர் ரபாத்தில் இருந்து 450 கிமீ தெற்கே அமைந்துள்ள டகோனைட் கிராமத்தில் செப்டம்பர் மாதம் 24 மணி நேரத்தில் 100 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, ஜகோராவிற்கும் டாடாவிற்கும்...

அதிகரிக்கும் சுற்றுலாப்பயணிகளின் வருகை…!

இந்த மாதத்தின் கடந்த 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 36,877 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து 10,857 பேரும் சீனாவிலிருந்து 3,105 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,425 பேரும் நாட்டுக்கு பிரவேசித்துள்ளனர். அதேநேரம், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 15 இலட்சத்து 21 ஆயிரத்து 685 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டி…!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அதனடிப்படையில், 966 பேர் ஆசனங்களுக்காக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகள் மற்றும் 19 சுயேச்சைக் குழுக்கள் உட்பட மொத்தம் 50 குழுக்கள் கொழும்பில் வேட்பாளர்களை...

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்…!

97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 37,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள்...

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை…!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் நிவாரணப் பணிகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் பாதுகாப்பு அமைச்சின்...

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் பொதுத் தேர்தலினூடாக வழங்கப்படும்; சுமந்திரன்…!

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை இந்த பொதுத் தேர்தலினூடாக இலங்கை தமிழரசுக் கட்சி வழங்கும் என அந்த கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் விரும்பியது...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை; சரத் பொன்சேகா…!

இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திசைக்காட்டி சின்னமான தேசிய மக்கள் சக்தி மற்றும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட மேற்கொண்ட கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த...

நாட்டில் நாளாந்தம் அதிகரிக்கும் உயிர் மாய்ப்பு சம்பவங்கள்…!

நாட்டில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. சிறுவர்களின் உடல் , உள நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லுமாறு அச்சங்கத்தின் மனநல வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலகில் அதிகளவான உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகும் நாடுகளில் இலங்கை 21 ஆம் இடத்தில் இருப்பதாக அச்சங்கத்தின்...

ரயிலில் மோதி மூவர் பலி…!

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (12.10) பிற்பகல் குறித்த மூவரும் ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரும்...

வீதியில் விழுந்து கிடந்த நபர் மீது மோதிய கார்…!

ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துத்திரிபிட்டிகம பிரதேசத்தில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகவெல பிரதேசத்தை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் விழுந்து கிடந்த நபர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது,  வீதியில் விழுந்து கிடந்த நபர் காயமடைந்துள்ள நிலையில் ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img