Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

கொழும்பு மாவட்டத்தில் அதிக டெங்கு நோயாளர்கள்..!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,494  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 17,159 ஆகும். இந்நிலையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து  10,150 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும்...

செலவு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு…!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு செலவு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (13.10) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறதென்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் மட்டுமே செலவு அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மட்டு கரடியனாறு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடியில் இரு தினங்களில் 18 மாடுகள் திருட்டு..!

மட்டக்களப்பு கரடியனாறு, வெல்லாவெளி, களவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிலுள்ள பிரதேசத்தில் கடந்த இரு தினங்களில் மாட்டுப் பட்டியில் இருந்த 7 பசுமாடுகள் 11 எருமை மாடுகள் உட்பட 18 மாடுகள்  திருட்டுப் போயுள்ளதாக இன்று சனிக்கிழமை (12)  அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுப்பட்டியில் வழமைபோல வியாழக்கிழமை இரவு எருமை மாடுகளை...

சீனாவுடன் தைவான் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்க்கும் தைவானின் ஜனாதிபதி…!

சீனாவுடன் தைவான் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம் என தைவானின் ஜனாதிபதி லாய் சிங் டே, சூளுரைத்துள்ளார். சுயாட்சியுடன் செயல்படும் தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்றும் அந்நாட்டை இணைத்துக் கொள்ள இராணுவப் பலத்தைக்கூட பயன்படுத்த தயங்க மாட்டோம் என சீனாவும் எச்சரித்துள்ளது. தைவானின் தேசிய தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி லாய் சிங் டே, “இணைப்பை...

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட மாற்றம்…!

கடும் மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு கிலோ கரட் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய்  400 ரூபாவாகவும், ஒரு கிலோ போஞ்சி  280 ரூபாவாகவும், ஒரு...

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்.தீவகப் பகுதிக்கு விஜயம்! 

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் (Eric Walsh) தீவக பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவக பெண்கள் வலையமைபின் பிரதிநிதிகளை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இன்று காலை யாழ்.புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமுக நிலைய மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பில் வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ...

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக விசேட பாதுகாப்பு…!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு இடம்பெறவுள்ள தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்...

வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்ற இராணுவம் ஈடுபாடு…!

தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் உயர்வினால் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள வெலிகொட்டாவை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்ற இலங்கை இராணுவத்தின் 18வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் படையினர் செயற்பட்டனர். அத்துடன், நீர் மட்டம் உயர்வினால் உடையும் அபாயத்தில் இருந்த பன்னல ஜயவதன ஏரிக்கரையை மணல் மூட்டைகளுடன் பாதுகாப்பதற்காக இலங்கை...

வல்வையில் விபத்து ஒருவர் உயிரிழப்பு..!

இன்று காலை வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே மீண்டும் விபத்து. ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே வடமராட்சி பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், பழைய இரும்பு ஏற்றும் பட்டா வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் BBD 0315 எனும் இலக்கம் கொண்ட வெகோ மோட்டார் சைக்கிளில்...

மட்டு போதனா வைத்தியசாலையில் சிசிரி கமராவை திருடிய சிற்றூழியர் ஒருவர் கைது..!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவை திருடிய வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் 51 வயதுடைய  சிற்றூழியர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த வைத்தியசாலையில் வாட் ஒன்றின் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமரா ஒன்றை சம்பவதினமான வியாழக்கிழமை (10) இரவு அங்கு கடமையாற்றிவரும் 51 வயதுடைய சிற்றூழியர்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img