Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிப்பு அதிகரிப்பு – சுவாச நோய் நிபுணர் எச்சரிக்கை!

பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், 14 மற்றும் 15 வயதிற்குட்பட்ட பல மாணவர்கள் சிகரெட்டுகளை ‘பரிசோதித்துப்’ பார்க்க முயற்சிப்பது...

நிஸாம் காரியப்பர் தோட்டத் தொழிலாளர் சமூகத்திடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்; எம்.ரவிகுமார்!

தேயிலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பரின் நிலைப்பாட்டை கடுமையாகக் கண்டிப்பதாக, புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம். ரவிகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: 2026 வரவு–செலவுத் திட்டத்தில், தேயிலைத் துறையில் இருநூறு...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான "குஷ்" ரக போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த மூன்று சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து நாட்டை வந்தடைந்த இவர்களிடம் இருந்து, சுமார் 4.22 கிலோகிராம் "குஷ்" போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் மாற்றம்: புதிய வர்த்தமானி அறிவிப்பு!

இலங்கை அரசாங்கம் மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை வெளியிட்டு, இலங்கை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியுள்ளது. 2025 நவம்பர் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இல. 2463/04 மூலம் இக்கட்டண மாற்றங்கள் அமுலுக்கு வந்துள்ளன. அதன்படி, ஏற்கனவே வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை  பெற்றுள்ள...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாளை மறுதினமளவில் அதாவது சனிக்கிழமை 22 ம் திகதியளவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இந்த தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் வட கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லும். ஆனபடியினால் வளிமண்டலவியல் திணைக்களம் வழங்குகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறு பொதுமக்கள்...

திருகோணமலையில் பௌத்த சின்னங்கள் விவகாரம்: ஞானசார தேரருக்கு சாணக்கியனின் எச்சரிக்கை!

கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (18) திருகோணமலைக்கு விஜயம் செய்தபோது, அப்பகுதியில் பௌத்த சின்னங்களை நிறுவுவதற்கு தடையாக இருப்பதாகக் கூறப்பட்ட தமிழரசுக் கட்சியின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்தார். திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனச் சாணக்கியன் தெரிவிப்பதையும், பௌத்த சின்னங்களை வைக்கத் தடையிட முயற்சிப்பதையும் அவர் குற்றம் சாட்டினார்.| “இவரைப்...

“புத்தருக்குச் சொந்தமான இலங்கை பூமியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர்” – ஞானசார தேரர்!

புத்தரின் பாரம்பரியத்துக்குச் சொந்தமான இலங்கை நிலத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சமீபத்திய திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குவதாக குறிப்பிட்டார். “திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றத்தினால்...

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டம்: சுகாதார அமைச்சால் புதிய குழு நியமனம்!

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை உருவாக்குவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு சிறப்பு குழுவொன்றை நியமித்துள்ளது. சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனைக்கமைய, அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இக்குழுவை நியமித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நியமனம், விசேட வைத்திய நிபுணர்களைச் சார்ந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி...

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – சஜித் பிரேமதாச கோரிக்கை!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், "இங்கே அறிக்கைகள் வெளியிட வேண்டிய அவசியமில்லை. ஒரு ஊடக நிறுவனம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால், சட்ட...

திருகோணமலை போதிராஜ விகாரை – கட்டுமான அகற்றுதல் உத்தரவு தொடர்பான மனு டிசம்பர் 16க்கு ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய உத்தரவை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டிசம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை விகாரையின் விகாராதிபதி, திருகோணமலை கல்யான வம்ச திஸ்ஸ தேரர் தாக்கல் செய்திருந்தார். மனு...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...