Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

நபரொருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால்  கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட  விமானம்!

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் புறப்பட்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் EK-434 விமானம் நேற்று (20) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இந்த அவசரத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பயணி தரையிறங்கியவுடன் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகின்...

அரகலய மக்கள் போராட்டத்தை ஜனநாயக முறையில் கட்டுப்படுத்த முடிந்தது; ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய மக்கள் போராட்டத்தை ஜனநாயக முறையில் கட்டுப்படுத்த முடிந்தது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், போராட்டங்களுக்கு சர்வதேச ஆதரவு இருந்தாலும், அதற்கு பணியாமல் நாட்டின் பிரச்சினைகளை சுயமாக தீர்க்க வேண்டும் எனவும் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “எங்களிடம் இருந்த பிரச்சினைகள் பங்களாதேஷ், நேபாளம் போன்ற...

நுகேகொடை பேரணியை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் – காவல்துறை அறிவிப்பு!

எதிர்க்கட்சிகள் இன்று நுகேகொடையில் முன்னெடுக்கவுள்ள பேரணியை முன்னிட்டு, அந்தப் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நுகேகொடை மேம்பாலம் அருகிலுள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதி வழியாக நாவல சுற்றுவட்டம் வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மாற்றுப் பாதைகளாக கொழும்பு /...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின்...

யாழில் டெங்கு பரவல் அதிகரிப்பு – சுகாதார நிர்வாகம் அவசர எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்ப் பரவல் திடீரென அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் (19.11.2025) ஊடகங்களுக்கு அவர் வழங்கிய தகவலின்படி, பருவமழைக்கு பின் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 1,220 பேர்...

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததன்படி, இன்று (நவம்பர் 20)  24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒன்றிற்கு ரூ. 1,000 உயர்ந்து, 330,000 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 329,000 ரூபாய் ஆக இருந்தது. தற்போதைய விலை நிலவரம்: 24 கரட்...

வரவு–செலவுத் திட்டத்தில் முரணாக செயல்பட்டவர்: 8 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தற்காலிக இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாக, 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த கட்சி உறுப்பினர்கள் 8 பேரின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்பட்டதால், அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்...

A/L உயிரியல் விடைத்தாள்களை திருத்துவதற்கு அனுப்ப மறந்த அதிகாரிகள்- 21 மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு!

இலங்கையின் கல்வித் துறையின் வரலாற்றில் இதுவரை இடம்பெறாத மிகப்பெரிய கவனக்குறைவு சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடியில் பதிவாகியுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், உயிரியல் பாடத்தை எழுதிய 21 மாணவர்களின் முதலாம் பகுதி (பல்தேர்வு) விடைத்தாள்கள் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர...

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாற்றிலேயே அதிக வருவாய் — 2025 இல் ரூ. 2 டிரில்லியனைத் தாண்டிய வசூல்!

உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD), 2025ஆம் ஆண்டிற்கான அதிகபட்ச வரி வருவாய் வசூலைப் பதிவுசெய்துள்ளது. இது நாட்டின் நிதி மேலாண்மை மற்றும் வரி சேகரிப்பு செயல்திறனில் ஒரு வரலாற்று முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. நவம்பர் 17, 2025 நிலவரப்படி, உள்நாட்டு இறைவரி திணைக்களம் மொத்த வருவாய் வசூல் ரூ. 2,002,241 மில்லியன் (சுமார் ரூ. 2.002 டிரில்லியன்)...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: சஜித் பிரேமதாச தனது கருத்தை மீளப் பெற வேண்டும் – எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன்!

திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள கருத்தை  அவர் மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், எதிர்கட்சி...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...