Saturday, July 4, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இலங்கை கைதி தமிழக சிறைச்சாலையிலிருந்து தப்பியோட்டம்..!

தமிழகத்தின்  திருச்சி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான இலங்கை கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் தப்பிச் சென்றிருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டதையடுத்து நேற்றைய தினம் விசேட சோதனைநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன்போது சிறைச்சாலையில் சில கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வேனில் பயணித்துக்கொண்டிருந்த ஓமான் பிரஜை திடீர் உயிரிழப்பு… !

காலி, பெந்தோட்டை பகுதியை நோக்கி வேனில் பயணித்துக்கொண்டிருந்த ஓமான் பிரஜை ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அலீம் சபி என்ற 35 வயதுடைய ஓமான் பிரஜை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் நுவரெலியாவிலிருந்து காலி, பெந்தோட்டை பகுதியை நோக்கி வேனில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

இன்றைய நாளுக்கான வானிலை…

மேல் மாகாணத்திலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டுள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள...

பூமியை விட்டு விலகுகிறதா நிலவு? ஒரு நாள் 25 மணிநேரமாக மாறவுள்ளதா?

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பூமியின் துணைக்கோளான நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஸ்கான்சின் - மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள குழுவொன்று நடத்திய இந்த ஆய்வில், நிலவானது, ஆண்டுக்கு சுமார் 3.8 சென்ரிமீற்றர் வீதம் பூமியிலிருந்து விலகிச் செல்வதாகவும் இதனால் பகலின் நேரம் அதிகமாகவும் எனவும் தெரிய வந்துள்ளது. ஒரு நாளில் 24 மணித்தியாலம்...

இன்றைய நாளுக்கான வானிலை….

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும்  அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல  இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்...

பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவரும் ஆதரவு மகத்தானது – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வருகின்ற ஆதரவு மகத்தானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அதை முன்னெடுத்துச்செல்ல முழுமையான ஒத்துழைப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக வடக்கின் மக்களிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு...

வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்..!

யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சங்கானை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் சிவானந்தக்கௌரி என்ற 51 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில், சுன்னாக சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு பெண்களை, ஹயஸ் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து...

ஞானச்சுடர் 319 ஆவது மலர் வெளியீடும், உதவித்திட்டங்களும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் மாதாந்த ஆண்மீக வெளியீடான ஞானச்சுடர் 319 வது வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர், முன்னாள் அதிபருமான ஆ.சிவநாதன் தலைமையில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் இடம் பெற்றது. காலை 10.45 தொடக்கம் 11.45...

வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம்…!

வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி  தொண்டைமனாறு செல்வச் சந்நிதியான்  ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை  4/8/2024 திகதி  ஞாயிற்றுக் கிழமை மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதில் முக்கிய  8 ஆம் திகதி வியாழக்கிழமையும்,  காலை 8  மணிக்கு      ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு சதுர்த்தி விநாயகப் பெருமானுடன் முருகப் பெருமானும் எழுந்தருள்வார்கள்....

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும்….

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தீர்மானித்துள்ளன. இதனை, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று சனிக்கிழமை (03.08) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...