Friday, April 17, 2026
No menu items!

News Updates

இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை..!

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பழைய இருப்பிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

இன்றைய நாளுக்கான வானிலை –  மக்கள் அவதானம்..!!

வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்...

வடக்குமாகாணத்தில்அதிகரித்துள்ள சைபர்குற்றமுறைப்பாடுகள்: அமைச்சர்ஆனந்தவிஜேபாலா!

நாட்டில் தினசரி சராசரியாக 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு–செலவுத் திட்ட விவாதத்தில் கேள்விக்கு பதிலளித்த அவர், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இவ்வாறான சைபர் குற்ற முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்றும் கூறினார். அவர் வழங்கிய...

தாதியர் ஆடை மாற்றம்: இஸ்லாமியப் பெண்களுக்கு கலாசாரத்துக்கேற்ற ஆடை அணிய அனுமதி கோரிக்கை – அரசு பதில்!

தாதியர் துறையில் பணியாற்றும் இஸ்லாமியப் பெண்கள், தங்களுடைய கலாசாரத்துக்கு ஏற்ப ஆடை அணிந்து பணியாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா அவர்களால் முன்வைக்கப்பட்டது. ஆனால், அரச துறையில் தாதியர்களின் ஆடை மாற்றம் சம்பந்தமாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசு...

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் – நாமல் ராஜபக்ச..!!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச  இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இணையவழி நுழைவுச் சீட்டு விற்பனை ஆரம்பம்!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இணையவழி நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (4) மதியம் 12 மணிக்கு தொடங்கியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது. மூன்று போட்டிகளும் நவம்பர் 11, 13 மற்றும் 15 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. ரசிகர்கள் எளிதில்...

மதுபான உரிமம் விவகாரத்தில் சாணக்கியன் குற்றச்சாட்டை நிராகரித்த பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் கருத்துக்களால் எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதற்கு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நேற்று(24) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பாக ஒரு தொழிலதிபரை கிங்ஸ்பரி உணவகத்தில் சந்தித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நேற்று...

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதல்; 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்..!!

ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் நேற்று(20) ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 21 மாணவர்கள், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாத்தறை பிரதான நீதவான் சதுரய திசாநாயக்க அவர்கள், மாணவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். நேற்றைய மோதலில் பல்கலைக்கழக சொத்துகள் சேதமடைந்ததாகவும், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை அடிப்படையாகக் கொண்டு இந்த கைது...

ட்ரம்ப் கனவு நிறைவேற்றம்:வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நீண்ட நாள் கனவு, வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை போல்ரூமாக மாற்றும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் அடையாளமாகவும், ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாகவும் கருதப்படும் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி கட்டடம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, அந்த பகுதியை போல்ரூம் அமைக்க வேண்டும்...

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு!

இந்திய அணிக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி விளையாடுகிறது. அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைவராகவும்...
- Advertisement -

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...