Saturday, May 16, 2026
No menu items!

News Updates

கையூட்டல் பெற்ற சுகாதார அதிகாரி கைது!

சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம சட்ட அதிகாரி ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC) இன்று (22) கைது செய்துள்ளது. கட்டிட வாடகை ஒப்பந்தம் தொடர்பாக கையூட்டல் கோரியமை மற்றும் பெற்றமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். நபர் ஒருவர் வழங்கிய முறைப்பட்டுக்கமைய ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டு கைது செய்துள்ளது. வாடகை ஒப்பந்தங்கள் எழுதுவதற்காக...

கடும் மின்னல் தாக்கம்; பொதுவெளிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக, குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேதங்களைக் குறைக்கவும், மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்கள் தகுந்த...

ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்!

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களையும் பாலங்களையும் தகர்த்துவிடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியல் (Truth Social) தள பதிவின் ஊடாக அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன்...

கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெறும் சலுகை நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

எரிபொருள் வாகனம் வைத்திருப்பவர்கள் கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெற அனுமதிக்கும் தற்காலிக சலுகை நாளை (18) நள்ளிரவுடன் முடிவடையும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபிசி) அறிவித்துள்ளது. இதற்கமைய கியூஆர் அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஒரு தற்காலிக நிவாரண ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டது என்றும்,...

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக விசேட செப நாள் அறிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் திகதியை செப நாளாக (விசேட பிரார்த்தனை நாளாக) இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று இந்த விடயத்தை அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோரின் அன்புக்குரியவர்களின் கோரிக்கைக்கு அமைவாக , தாக்குதல்கள் குறித்த உண்மையை எல்லாம் வல்ல இறைவன்...

கோட்டை பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம்;ஒருவர் கைது

அண்மையில் புதுப்பிக்கப்பட்டு, ஏப்ரல் 08 அன்று பொதுப் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்ட கோட்டை மத்திய பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புனரமைக்கப்பட்ட பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக பேருந்து நிலையத்தின் நலன்புரி பிரிவினால் முன்வைக்கப்பட்ட முறைபாடுகளைத் தொடர்ந்து, நேற்று (11)...

நிலக்கரி கொள்முதல் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் சி.ஐ.டியில் முறைப்பாடு

இலங்கைக்கு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறையில் (CID) இன்று (ஏப்ரல் 11) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியின் செயலாளர் சமர்ப்பித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தணிக்கை அறிக்கைகள் மற்றும் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளின்...

எரிபொருள் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது கியூ.ஆர் முறைமை கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே ராஜகருணா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் வாகன இலக்க தகட்டின் ஒற்றை...

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளபக்கத்தின் ஊடாக இந்த அழைப்பை விடுத்துள்ளார். அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (United States Central Command), மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும்...

கண்டியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல் ஒன்று கிடைத்துள்ளதால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50 வீத வரிவிதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள 30% சுங்க வரியுடன் மேலதிகமாக 50% மேலதிக வரியை அரசாங்கம் விதித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு...