Friday, April 17, 2026
No menu items!

News Updates

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2021ஆம் ஆண்டு நியாயமான காரணமின்றி கைது செய்து தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனு, 2026 மார்ச் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (02.10.2025) நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல்...

இலங்கை கிராமப்புற பால திட்டத்திற்கு €730,000 கூடுதல் மானியம் ஒதுக்கிய நெதர்லாந்து !

இலங்கையில் நடக்கும் 162 கிராமப்புற பாலங்கள் கட்டுமான திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு  €730,000 கூடுதல் மானியத்தை ஒதுக்கியுள்ளது. இந்த மானியம் திட்டத்தின் கூடுதல் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். செப்டம்பர் 2025 நிலவரப்படி, திட்டம் 96% இயற்பியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளது; 151 பாலங்களின் பணிகள்...

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் தேசிய வைபவம்..!!

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (9) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பிரதான ஆதிவாசியினத் தலைவரான, விஷ்வகீர்த்தி வனஸ்பதி ஊருவரிகே வன்னியலெத்தோ, 1996 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடந்த ஆதிவாசிகள் மாநாட்டில் கலந்து கொண்டபோது, உலக ஆதிவாசிகள் தின...

ரவீந்திர ஜடேஜாவை பாராட்டிய பார்த்திவ் படேல்!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவை முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார். உலகின் நம்பர்.1  பல்துறை ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜா அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு  ஓட்டங்களை  குவித்தார். இந்த தொடரில் 516 ஓட்டங்களை பெற்று  அதிக...

கிளிநொச்சி பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்..!!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள சமஸ்டி தீர்வை வலியுறுத்திய வடக்கு கிழக்கு மாகாணங்களில் 100நாள்  முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் ஒன்பதாவது நாளான இன்று09.08.2025 கிளிநொச்சி பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (கிளிநொச்சி நிரூபர் ஆனந்தன்)

தனியார் பஸ்  சேவைகள் இடைநிறுத்தம்..!!

கம்பஹாவிலிருந்து கொழும்பு மற்றும் பல இடங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ் சேவைகள், சில இடங்களில் நிறுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தனியார் பஸ்  உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோர், கடத்தப்பட்டோர் புதைகுழிக்குள் உள்ளார்கள் – கஜேந்திரன் அதிர்ச்சி தகவல்!

ஸ்ரீலங்கா அரசாங்கமானது தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புகளை மேற்கொண்டு வந்து, 2009இல் அதன் உச்சக்கட்ட செயற்பாடாக சுமார் ஒரு லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா ஆயுதப்படையினராலே மிகக் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் செம்மணியில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர்...

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி!

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி 2026 ஆம் ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு டெஸ்ட் தொடர், 3 இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் அடங்கும். அதன்படி, இந்தத் தொடர் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி முதல்...

100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை- ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வர்த்தகர்கள் குழுவின் முக்கிய சந்திப்பு!

‘Dream Destination’ எனும் திட்டத்தின் கீழ் 100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வர்த்தகர்கள் குழுவின் முக்கிய சந்திப்பு நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த  சந்திப்பு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், “நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைய...
- Advertisement -

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...