Monday, June 1, 2026
No menu items!

News Updates

கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் இளைஞன் ஒருவர்!

தெற்கு பாணந்துறை பொலிஸ் பிரிவின் வாலன வீதிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த  ஒரு நபர் உயிரிழந்துள்ளார். கம்புருகமுவ, பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் நேற்று இரவு (08.12.2025) உயிரிழந்துள்ளார். இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணையில், பணத் தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. பொலிஸாரல் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, சடலம் பாணந்துறை வைத்தியசாலையின்...

புனரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கவனம்! நுவரெலிய மாவட்டத்தில் நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு சேதம்

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் கிரகரி வாவியின் கண்காணிப்பு வழங்கும் பொறுப்பை நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நுவரெலிய மாவட்ட செயலகத்தில் நேற்று (08) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. சீரற்ற காலநிலையினால் கொத்மலை...

வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு !!

​நாட்டின் பல பகுதிகளில்  'டிட்வா' சூறாவளி  (Cyclone Ditwah) மற்றும் கடுமையான வானிலையால் பரவலான இடையூறுகள் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) நீட்டித்துள்ளது. ஆரம்பத்தில் வரிக் கணக்குகள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக...

இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை..!

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பழைய இருப்பிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

இன்றைய நாளுக்கான வானிலை –  மக்கள் அவதானம்..!!

வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்...

வடக்குமாகாணத்தில்அதிகரித்துள்ள சைபர்குற்றமுறைப்பாடுகள்: அமைச்சர்ஆனந்தவிஜேபாலா!

நாட்டில் தினசரி சராசரியாக 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு–செலவுத் திட்ட விவாதத்தில் கேள்விக்கு பதிலளித்த அவர், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இவ்வாறான சைபர் குற்ற முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்றும் கூறினார். அவர் வழங்கிய...

தாதியர் ஆடை மாற்றம்: இஸ்லாமியப் பெண்களுக்கு கலாசாரத்துக்கேற்ற ஆடை அணிய அனுமதி கோரிக்கை – அரசு பதில்!

தாதியர் துறையில் பணியாற்றும் இஸ்லாமியப் பெண்கள், தங்களுடைய கலாசாரத்துக்கு ஏற்ப ஆடை அணிந்து பணியாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா அவர்களால் முன்வைக்கப்பட்டது. ஆனால், அரச துறையில் தாதியர்களின் ஆடை மாற்றம் சம்பந்தமாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசு...

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் – நாமல் ராஜபக்ச..!!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச  இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இணையவழி நுழைவுச் சீட்டு விற்பனை ஆரம்பம்!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இணையவழி நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (4) மதியம் 12 மணிக்கு தொடங்கியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது. மூன்று போட்டிகளும் நவம்பர் 11, 13 மற்றும் 15 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. ரசிகர்கள் எளிதில்...

மதுபான உரிமம் விவகாரத்தில் சாணக்கியன் குற்றச்சாட்டை நிராகரித்த பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் கருத்துக்களால் எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதற்கு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நேற்று(24) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பாக ஒரு தொழிலதிபரை கிங்ஸ்பரி உணவகத்தில் சந்தித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நேற்று...
- Advertisement -

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...