Thursday, July 16, 2026
No menu items!

News

மர்மமான முறையில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில்  அதிகாலை வேளை நேற்றைய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணைகளில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் எனவும், உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை. என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஜனாதிபதியாக சஜித்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவினால் வெற்றிப் பெற முடியாது என்றும் அதிக வாக்குகளை பெற்று சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு  கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்தால் நாட்டை முன்னோக்கி...

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு...

சாதனை படைத்த பத்தும் நிஸ்ஸங்க

நேற்றைய தினம்(09) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டி நடைபெற்றிருந்தது. பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50...

காணாமல் போன ஆரல் கடல்

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள ஆரல் கடல் முழுவதும் வற்றி நிலமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இக்கடல் உலகின் 4 ஆவது பெரிய கடலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆரல் கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தப்பட்ட நிலையில் 1960 ஆம் ஆண்டு...

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான 13 வயது சிறுமி

குருணாகல் பிரதேசத்தில் தாயின் கை, கால்களை கட்டி வைத்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபர் ஒருவர் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தவர் எனவும் சம்பவத்தின் போது சந்தேக நபர் மது போதையில் வீட்டுக்கு வந்த...

மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தந்தை!

புத்தளம் - மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று(09) காலை பாடசாலை பேருந்தில் தனது மகனை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரம் காத்திருந்த நபரரை வேகமாக வந்த கார் ஒன்று குறித்த நபர் மீது மோதியதில் உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 49 வயதுடைய வர்ணகுலசூரிய ஜனதா திசேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன் போது வேகன்ஆர்...

நிரம்பி வழியும் சிறைச்சாலை வைத்தியசாலை..!

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளதாகவும், ஆனால் தற்போது 344 கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார். நாடு முழுவதும் முப்பது சிறைகள் உள்ளன, ஒவ்வொரு சிறைக்கும் தனி வைத்தியசாலை உள்ளது. அவற்றுள் வெலிக்கடை பிரதான சிறைச்சாலை...

மக்களின் சாப்பாட்டுத் தட்டில் புதிய கறி வகைகள் இல்லை…!

நேற்றைய தினம் (09) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சாதாரண பொதுமக்களின் ஒருவேளை சாப்பாட்டிலே புதிய கறி வகைகள் சேர்க்கப்படுவதில்லை என ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இப்போது இருந்த கறி வகைகளும் குறைந்துள்ளன. இன்று மக்களுக்கு தங்களுடைய அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று மக்களுக்கு தங்களுடைய...

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்..!

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில்  பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதோடு, ஆணைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவகங்களுக்கு எதிராக தாக்கல் செய்த...
- Advertisement -

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...