Friday, May 1, 2026
No menu items!

ஜனாதிபதி வேட்பாளர்

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திற்குச் சென்ற அநுர குமார திஸாநாயக்க…!

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இந்து மத குருக்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க. இன்று (17.08) காலை ஆலயத்திற்கு சென்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்காக அவர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டதுடன் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து மதகுருமார்களுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும், இச்சந்திப்பில் தேசிய மக்கள் படையின் தேசிய...

அநுரகுமார திசாநாயக்க, கண்டி மல்வத்து பீட மகா சங்கத்தினரை சந்திப்பு…!

கண்டி மல்வத்து மஹா விகாரையின் சியம் மஹா நிக்காய மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க பூஜ்ய திம்புல்கும்புரே விமலதம்ம ஹிமிபாணன் தேரர் ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க சந்தித்துள்ளார். நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி மஹா சங்கத்தினருடன்...

அநுரவைச் சந்தித்த வேலையில்லாப் பட்டதாரிகள்..!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (08) நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வேலையற்ற பட்டதாரிகள் சிலர் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமாக அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளனர். இதன்போது வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரையில் வேலையில்லாத பட்டதாரிகள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள்...

அறிவிக்கப்பட்ட அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்..!

சோஷலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் உலக சோஷலிச வலைத்தளத்தின் கொழும்பு ஆசிரியர் குழுவின் உறுப்பினருமான பாணி விஜேசிறிவர்தன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சோஷலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (08) கொழும்பு 07 சுதந்திர சதுக்க ஒழுங்கையில் அமைந்துள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது . பாணி...

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு…

தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, சர்வசன அதிகார அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் தற்போது இடம்பெற்று வரும் சர்வஜன அதிகார மாநாட்டில் வைத்தே இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவால் திலித் ஜயவீர, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மொட்டுக்கட்சியின் முக்கிய அறிவிப்பு…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (01.08) சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இடம்பெற்ற...

வேட்பாளரை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி, எதிர்வரும் 31ஆம் திகதி, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது ஒரேயொரு சட்டபூர்வமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே உள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை...

நிபந்தனைகளை முன்வைத்துள்ள மொட்டுக்கட்சி…

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன  தம்மிடம் பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தனியார் தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 51% வாக்குகளைப் பெறுவது உறுதியானால், பொதுஜன...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img