Friday, May 1, 2026
No menu items!

ஜனாதிபதி வேட்பாளர்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் திலித் ஜயவீர சந்திப்பு..!

ஜனாதிபதி வேட்பாளரான தொழிலதிபர் திலித் ஜயவீரவுடனான கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீரவை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று பொரளையிலுள்ள மவ்பிம ஜனதா கட்சி தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே சங்கத்தின் செயலாளர் பிரபாத் சுகதபால உள்ளிட்டோர் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். சர்வஜன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி...

இன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளரின் பிரச்சாரம்..!

தமிழ் பொதுக்கட்டமைப்பு சார்பாக சுயேட்சையாக  போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் பிரச்சார கூட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார். பளையிலிருந்து தனது கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரச்சாரக்கூட்டத்தை ஆரம்பித்திருந்தார்.பளை நகருக்கு வருகை தந்த வேட்பாளருக்கு தமிழ் பாரம்பரிய பறை மற்றும் மங்கள வாத்திய இசையோடு அழைத்து வரப்பட்டார்.  பேருந்து நிலையத்தில் பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.தொடர்ந்து...

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் செயலாளருக்கும் தலைவருக்கும் விளக்கமறியல்..!

ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்ட அந்த கட்சியின் செயலாளரும் தலைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவுக்கு ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்காக 3 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கட்சியின் செயலாளரும் தலைவரும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கொழும்பு பிரதான...

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த விஜயதாஸ ராஜபக்ஷ…!

ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஷ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கான நீதியை வழங்கும் பொருட்டு தன்னால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ பேராயருக்கு விளக்கமளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் நடடிவக்கை எடுப்பதாகவும் அவர்...

ஜனாதிபதி வேட்பாளர்கள் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் கொள்கைகளை முன்வைக்க வாய்ப்பு…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் தமது கொள்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் அரசாங்க வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தங்கள் கொள்கைகளை முன்வைக்க பதினைந்து நிமிடங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரிற்கு பதிலாக புதிய வேட்பாளர்…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் முஹம்மட் இல்யாஸுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முஹம்மட் இல்யாஸின் இறப்புச் சான்றிதழை ஆணைக்குழுவில் சமர்ப்பித்து புதிய வேட்பாளரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். புதிய வேட்பாளரின் நியமனம் மூன்று நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்...

ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்யாஸ் காலமானார்…!

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில்  தனது 78ஆவது வயதில் காலமானார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் போது யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேயை ஆதரித்து யாழில் தேர்தல் பிரசாரம்!

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேயை ஆதரித்து இன்று யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமான குறித்த பிரசார நடவடிக்கை யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே, புதிய...

கூட்டம் இல்லாத தேர்தல் பிரசாரம் தொடர்பாக சரத் பொன்சேகாவின் கருத்து!

ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தனது பிரச்சார முயற்சிகள் உண்மையானவை என, சமூக ஊடகங்களில் மக்கள் கூட்டம் இல்லாத தேர்தல் பிரசாரம் தொடர்பான காணொளி ஒன்று பரவியதற்கு பதிலளித்துள்ளார். 2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்ததன் பின்னர், அபிவிருத்திக்காக பாடுபட முயற்சித்ததாகவும், பல தடைகளை எதிர்நோக்க நேரிட்டதாகவும் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,...

ஆரம்பிக்கும்  நாமலின் பிரச்சார கூட்டம்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (21.08) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டத்தை அனுராதபுரத்தில் நடத்த முடிந்தமை பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றியடையச் செய்யும் நோக்கில்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img