பாதுகாப்பு கோரும் எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்க ஒப்புதல்!
பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து இன்று (31) பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்தக் கலந்துரையாடலின் போது,
கானாவில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: 11 பேர் கைது – பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு!
கானாவில், பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தங்கம் விற்பனை என்ற போர்வையில் பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுகின்றனர். 2023 ஆம் ஆண்டில், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு தங்கம் வழங்குவதாக கூறி பணம் பெற்றனர்.
நாளை பாராளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு ஆடையில்..!!
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, நாளை புதன்கிழமை (22) பாராளுமன்றத்தில் ஒரு சிறப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) அறிவித்துள்ளார். பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை அனைத்து உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் நுழைவாயிலில் ஒரு சின்னத்தை விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளதாக,
“யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி அல்ல” – பாராளுமன்றத்தில் கொந்தளித்த ராமநாதன் அர்ச்சுனா!
யாழ்ப்பாணம் குறித்து அரசியல் மேடைகளில் மட்டுமே காணப்படும் பேராட்சிகள் மற்றும் வாய்வீச்சுகள், உண்மையான அபிவிருத்தியிலில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (26) பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தார். “சும்மா, ஆ காட்டுறது பே காட்டுறதை யாழ்ப்பாணத்தில் காட்டக் கூடாது. யாழ்ப்பாணம் அவரவர் வெற்றிலை பெட்டி அல்ல,” என அவர் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “இந்த அரசாங்கம் யாழ்ப்பாணத்தில்
கோபா குழுவின் புதிய தலைவர் நியமனம்!
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 2025.08.06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (12) கூடிய அரசாங்கக் கணக்குகள்
ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் நிதி முகாமைத்துவம் சுயாதீனமாக உள்ளதா? ; கலாநிதி ஹர்ஷ டி சில்வா!
ஒரு சுயாதீன நிறுவனமான இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் நிதி முகாமைத்துவம் சுயாதீனமாக உள்ளதா? இல்லையா? என்பது குறித்து சிக்கல் நிலை காணப்படுவதாக பொது நிதிக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் வரவு செலவு மதிப்பீட்டைப் பற்றி கலந்துரையாடுவதற்காக பொது நிதிக் குழுவிற்கு அழைக்கப்பட்ட
உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்!
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நேற்று (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், புதிய சட்டமூலத்தால் இச்சலுகை அவர்களுக்கு இழக்கப்பட்டுள்ளது. இதன்படி, மஹிந்த ராஜபக்ஷ
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை!
சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த முடிவை இன்று சபாநாயகர், பாராளுமன்றத்தில் முன்வைத்த பின்னரே ரஞ்சித் மத்துமபண்டார இதனை அறிவித்தார். எதிர்க்கட்சியின்
பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை பின் கைவிடப்பட்ட அரச பேருந்து பணி பகிஸ்கரிப்பு!
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின் அரச பேருந்துகளின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது. யாழ்ப்பாணம் அரச பேருந்துகள் நேற்று முன்னெடுத்திருந்த பணி பகிஸ்கரிப்பு இன்று காலை 10 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன் யாழ் அரச பேருந்து சாலை அதிகாரிகளிடம் பேச்சு
நுவரெலியா வீதி அபிவிருத்திக்கு ரூ. 2,500 மில்லியன் – தொழிலாளர் சம்பள உயர்வு உறுதி; அமைச்சர் பிமல் ரத்நாயக்க !
நுவரெலியா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (14) மாலை, ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு மேற்கொண்ட கள விஜயத்தின்போது ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை அறிவித்தார். இந்த கள விஜயத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல சுரவீர,