Wednesday, June 17, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்

பாராளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை  பின் கைவிடப்பட்ட அரச பேருந்து பணி பகிஸ்கரிப்பு!

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன்  அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின் அரச பேருந்துகளின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது. யாழ்ப்பாணம் அரச பேருந்துகள் நேற்று முன்னெடுத்திருந்த பணி பகிஸ்கரிப்பு இன்று காலை 10 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன் யாழ் அரச பேருந்து சாலை...

நுவரெலியா வீதி அபிவிருத்திக்கு ரூ. 2,500 மில்லியன் – தொழிலாளர் சம்பள உயர்வு உறுதி; அமைச்சர் பிமல் ரத்நாயக்க !

நுவரெலியா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (14) மாலை, ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு மேற்கொண்ட கள விஜயத்தின்போது ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை அறிவித்தார். இந்த கள விஜயத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான...

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

யாழ். வலிகாமம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக பௌர்ணமி தினமான இன்றையதினமும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தில்...

COPA குழு தலைவர் பதவி வெற்றிடம்: செப்டம்பர் 12ல் புதிய தலைவர் தேர்வு!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவர் பதவி தற்போது வெற்றிடமாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நேற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குறித்த பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுவதற்கான ஒப்புதலின்படி தான் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கமைய, செப்டம்பர் 12 ஆம் திகதி புதிய...

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் இராஜினாமா செய்துள்ளார். பாராளுமன்றத்தில் (06) இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார். அரசாங்கக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வழி வகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...

கொலை குற்றவாளி சோமரத்னாவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி!

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்திருக்கின்ற செம்மணி மனிதப் புதை குழி ...

நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக பிடியாணை​ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை (29) சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யாழில் இனப்படுகொலைக்கான நீதி கேட்டு ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்ப விசேட கலந்துரையாடல் !

இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலை தொடர்பாக எதிர்வரும் ஐ.நா கூட்டத்தொடருக்கான கடிதத்தை அனுப்புவதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இடம் பெற்றது. தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த கலந்துரையாடலில் சிவில் அமைப்புகள் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்குபற்றினர். நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன்,...

CID யில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை முன்னிலையாகியுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பிமல் ரத்நாயக்க தெரிவு!

பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை  (08)...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img