Saturday, July 18, 2026
No menu items!

அமித் ஜயசுந்தர

உயிரியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தின் உயிரியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகிறது. 8ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த பரீட்சை 10 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். நாடு முழுவதும் 75 பரீட்சை மையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளது.  

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பதிவாகிய அதிகூடிய புள்ளி!

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளுக்கமைய 16.05 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கும் அதிக புள்ளிகளை பெற்றுள்ளனர். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக 188 புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   <!-- -->

பாடசாலையின் கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்..!

அரச, அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகின்றன. இதன்படி, சகல பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 2025ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் இந்த ஆண்டு தரம் ஒன்றுக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள மாணவர்களுக்கான...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பிற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக, அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய பரீட்சை நிலையத்திற்குச் செல்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...

க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்; பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போடப்படாது, திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பரீட்சைகள்...

2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு….!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடத்தப்பட்டதுடன், மொத்தம் 452,979...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு…!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15.09) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ளார். இவ்வருடம் ஐந்தாம் தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்...

எதிர்வரும் 15ஆம் திகதி தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம்; பரீட்சை ஆணையாளர் நாயகம்!

எதிர்வரும் 15ஆம் திகதி தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தரம் 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12.15 மணிவரை நடைபெறவுள்ளது. அதனால், பரீட்சை நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்கு அருகில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்...

க.பொ.த உயர்தரப் பரீட்சை : வெளியானது புதிய அட்டவணை

2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முறை கொரிய மொழி புதிய பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டதால் பரீட்சை அட்டவணையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சாத்திகள் பழைய அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அனுமதி அட்டையில்...
- Advertisement -spot_img

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...
- Advertisement -spot_img