Saturday, April 18, 2026
No menu items!

இடைநீக்கம்

அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி இடைநீக்கம் !

அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) இடைநீக்கம் செய்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் குறைபாடு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் நடைபெற்ற ஐ.சி.சி வருடாந்த பொதுக் கூட்டத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தவும், நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும்...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ராகிங் சம்பவம்: 22 மாணவர்கள் இடைநீக்கம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்த சம்பவத்தைத் தொடர்ந்து 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழு ஒன்று முதலாம் ஆண்டு மாணவர்களின் ஒரு குழுவை மனிதாபிமானமற்ற முறையில் ராகிங் நடைமுறைகளுக்கு உட்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்த இடைநீக்கம் விதிக்கப்பட்டது. தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர்...

தேசபந்துவின் உயிருக்கு அச்சுறுத்தல் – விசாரணை ஆரம்பம்..!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (2) புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது. இதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பூஸ்ஸ சிறையில் உள்ள இரு சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு அந்த திணைக்களம், கோட்டை நீதவான் நிலுபுலி...

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அலன்டீலன் இடைநீக்கம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அலன்டீலன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் M.A.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் அங்கத்தவரான அலன்டீலனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தேசபந்து தென்னகோன் தலைமறைவிற்கு உதவிய நபருக்கு பிணை..!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கைது செய்யப்பட்ட நபரை 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில்...

சமல் சஞ்சீவ இடைநீக்கம்…!

பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட்ட வைத்தியர் சமல் சஞ்சீவ இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொது சேவை ஆணையத்தின் சுகாதார சேவைகள் குழு நடத்திய விசாரணையில், அந்த நிறுவன விதி முறைகளை மீறிச் செயல்பட்டது தெரியவந்ததையடுத்து இவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img