Tuesday, July 28, 2026
No menu items!

இந்தியர்கள்

மக்காவுக்கு புனிதபயணத்திற்காக பயணித்த பேருந்து விபத்து- 42 இந்தியர்கள் பலி!

சவுதி அரேபியாவில் மக்காவுக்கு புனிதபயணத்திற்காக பயணித்த பேருந்து, டீசல் பாரவூர்தியுடன் மோதி விபத்திற்குள்ளாகியதில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

கள்ளச்சாராயம் குடித்து குவைத்தில் 40 இந்தியர்கள் பாதிப்பு, 10 பேர் உயிரிழப்பு!

குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 இந்தியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குவைத்தில் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதனால், அல் ஷுயூக் எனும் பகுதியில் விற்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்தை வாங்கி பலர் குடித்துள்ளனர். இதனால், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் எனவும், இதுவரையில் சிகிச்சை பலனின்றி இந்தியர்கள் உள்பட 10 வெளிநாட்டவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவலறிந்த...

விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவார்கள் – ட்ரம்ப் எச்சரிக்கை..!

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக தங்கியுள்ள இந்தியர்கள் விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ட்ரம்பின் இந்த புதிய அறிவிப்பால் அங்கு வசித்து வரும் 45 இலட்சம் இந்தியர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதேவேளை அமெரிக்காவில் சட்டபூர்வமாக...

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்திய மக்கள்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக  குடியேறிய  இந்திய மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து   இராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 18,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கப்பல் விபத்தில் மாயமானவர்களில் 09 பேர் மீட்பு…!

அரபிக்கடலில் எரிபொருள் கப்பல் விபத்திற்குள்ளாகிய பின்னர் அதன் பணியாளர்களை தேடும் நடவடிக்கையில் 09 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களில் 08 இந்தியர்களும் இலங்கையர் ஒருவரும் அடங்கியுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. எஞ்சிய 7 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. மூழ்கிய கப்பலில் 16 பணியாளர்கள் இருந்ததாகவும் அதில் 13 பேர் இந்தியர்கள்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img