Saturday, July 18, 2026
No menu items!

இஸ்ரேல்

லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான செய்தி!

இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது அங்கு நிலவி வரும் போர் சூழ்நிலையைத் தொடர்ந்து, பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. போர் இடம்பெற்று வரும் பகுதிகளில் உள்ள இலங்கையர்களைப்...

பாலஸ்தீனியர்களின் சடலங்கள் அடங்கிய கொள்கலன்களை அனுப்பிய காசா!

அடையாளம் காண முடியாத நிலையில் பாலஸ்தீனியர்களின் சடலங்கள் அடங்கிய கொள்கலன்களை அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் மீது காசா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதன்படி, இஸ்ரேலிலிருந்து அனுப்பப்பட்ட 88 பாலஸ்தீனியர்களின் சடலங்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாகக் குறித்த சடலங்களைப் பெறுவதற்கு காசாவின் சுகாதார அமைச்சு மறுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் இந்த...

தென்லெபனான் மீது தொடரும் விமான தாக்குதல்!

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 275 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என லெபனான் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 21 சிறுவர்கள் உள்ளனர் என லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டயர் நகரம் உட்பட தென்லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து விமானதாக்குதலை மேற்கொள்கின்றது மக்கள் அங்கிருந்து தப்பியோடுகின்றனர் என அந்...

பாடசாலை மீது தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்..!

காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.நா வின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் மத்தியில் உள்ள நுசெய்ரட்டின் இரு பாடசாலைகள் தாக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நாவின் அமைப்பின் புகலிடத்தின் முகாமையாளர் உட்பட பலர் உள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. இதேவேளை பாடசாலை மைதானத்தில் அமைந்திருந்த...

இஸ்ரேல்-இலங்கை ஒப்பந்தத்தின்படி விவசாய துறை தொழில் வாய்ப்பிற்காக அனுப்பப்படும் இளைஞர்கள்..!

இஸ்ரேல் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைவாக  இலங்கை இளைஞர்கள் 2252 பேருக்கு இஸ்ரேலிலில் விவசாய துறையில் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி மற்றும் 18ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் செல்ல இருக்கும் 69 இளைஞர்களுக்கான விமான பற்றுச்சீட்டு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (10.09) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல்...

இஸ்ரேல் தூதரகம் அருகே பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி..!

ஜெர்மனியின் முனிச் நகரில் இஸ்ரேல் தூதரகம் செயல்படுகிறது. தூதரகம் அருகில் துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்களுடன் நபரொருவர் சுற்றித் திரிந்துள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த பொலிஸார் அவரை தடுத்து விசாரணை நடத்த முற்படுகையில் அவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். பொலிஸாரும் அவரை நோக்கி சுட்டதில் சம்பவ இடத்திலேயே அந் நபர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் 18 வயதான இளைஞராவார். 1972ஆம்...

பலஸ்தீனர்களுக்கான நன்கொடையை முடக்க இஸ்ரேல் கூகுளில் விளம்பரம்….

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்திற்கு பயனர்கள் நன்கொடை வழங்குவதை முடக்கும் வகையில் இஸ்ரேல் அரசு ‘கூகுள்’ விளம்பரங்களை வாங்குவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ‘நிறுவனத்தின் ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் அதன் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது’ என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசரினி...

சடலங்களாக மீட்கப்பட்ட 06 பணயக்கைதிகள்……..!

காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பணயக்கைதிகளின் சடலங்களை மீட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதை ஒன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை (31) இந்த உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இந்தப் பணயக்கைதிகளை அடைவதற்கு முன்னர் இவர்கள் கொடியமுறையில் கொல்லப்பட்டிருப்பது ஆரம்பக்கட்ட ஆய்வில் இருந்து தெரியவருவதாக இஸ்ரேல்...

பிறந்து நான்கு நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு….!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காஸாவின் டெய்ர் அல் - பாலா பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்கதலில் சுமார் 90 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட அவசர செய்தி..!

இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவசரநிலையில் செயல்பட பல தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ​​இஸ்ரேலில் தற்போது 11,000 இலங்கையர்கள் பணிபுரிவதாகவும் அவர்களில் 70 வீதமானவர்கள் தாதியர்களாக கடமையாற்றுவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். மேலும் 30 வீதமானோர் விவசாயம் மற்றும் நிர்மாணத்துறையில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தேவையற்ற...
- Advertisement -spot_img

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...
- Advertisement -spot_img