Saturday, July 18, 2026
No menu items!

இஸ்ரேல்

  தொடரும் காஸா மீதான தாக்குதல்…!

இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரையில் நடைபெற்று வருகின்றது. காசாவை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரையில் 39 ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், காசாவிலுள்ள ஷெஜையா எனுமிடத்தில் பலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள பாடசாலையொன்றின் மீது நேற்று வியாழக்கிழமை இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில்...

அதிரடி உத்தரவு பிறப்பித்த ஈரான தலைவர்…

ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேலை நேரடியாகத் தாக்க உத்தரவிட்டுள்ளார். ஈரானில் ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹானேவை இஸ்ரேல் கொன்றதையடுத்து ஈரானிய தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். படுகொலை தொடர்பாக ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்தியபோது, ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி ஈரானிய பாதுகாப்புப் படைகளுக்கு இஸ்ரேலைத் தாக்க உத்தரவிட்டுள்ளமை...

ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார்!

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு இஸ்ரேலில் உள்ள சிறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்தபாவுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என பலஸ்தீன அதிகாரிகள் குற்றம்...

ஒலிம்பிக் சுடரை ஏந்திய காலை இழந்த பெண் ஊடகவியலாளர்….!!

இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் மேற்கொண்டவேளை காயமடைந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரான்ஸ் தலைநகரில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளார். ஊடகப்பணியின் போது கொல்லப்பட்ட காயமடைந்த பத்திரிகையாளர்கள் நினைவாக  அவர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் 26ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் முழுவதிலும் பல்வேறு துறைகளை சார்ந்த பத்தாயிரம் பேர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்கின்றனர். ஏஎவ்பியின்...

போரினால் குழந்தைகள் இறப்பு வீதம் அதிகரிக்கும் ; ஐ.நா.சபை எச்சரிக்கை!

இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையில் நீண்ட காலமாக போர் நடந்து வருகின்ற நிலையில், பட்டினியின் காரணமாக காசா குழந்தைகள் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுவரையில் 37,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, 86,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். பொதுவாக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற ஒரு...

இஸ்ரேலின் தாக்குதலில் 29 பேர் பலி…!!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பலஸ்தீனத்தின் காசா நகரத்தில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பாடசாலையின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான் வழித் தாக்குதலில் சுமார் 29 பேர் பலியாகியுள்ளனர். காசாவின் அப்சான் பகுதியிலுள்ள அல்-அவ்டா பாடசாலையில் 2000 பேர் தஞ்சமடைந்துள்ளனர். இதன்போதே இப் பாடசாலையை குறிவைத்த இஸ்ரேல் தாக்குதலை...

திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலா பயணி! -ஆளுநர் செந்தில் தொண்டமான் வழிகாட்டலில் மீட்பு நடவடிக்கை வெற்றி-

இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவேலி பிரதேச சபை,சுற்றுலாப் பணியகம் ஆகியவை மீட்பு பணி ஈடுபட...

இஸ்ரேல் இராணுவத்தின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் பலி..!

காசா(Gaza) வடக்கு எல்லை பகுதியான பெய்ட் ஹனெளனில் நடத்தப்பட்ட வான்வளி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் ஸ்னைப்பர் பிரிவுக்கு தலைமை வகித்த அகமது அல் சவர்கா இராணுவ போர் விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் இராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே(Avichay Adraee)  கூறியுள்ளார். இந்நிலையில்...

நீதிமன்றத்தின் தீர்ப்பை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை..!

சர்வதேச நீதிமன்றம் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ள போதிலும் இஸ்ரேல் அதனை ஏற்றுக்கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தனது இராணுவநடவடிக்கையை நிறுத்தவேண்டும் என சர்வதேசநீதிமன்றம் உத்தரவிடக்கூடாது என இஸ்ரேல் எதிர்பார்த்தது ஹமாசினை தோற்கடிப்பதற்கு இராணுவ நடவடிக்கை அவசியம் என இஸ்ரேல் கருதுகின்றது. எனினும் சர்வதேச...

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்:24 பேர் பலி!!!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே இரவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மற்றும் மத்திய காசாவில் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா நகரின் மையத்தில் அமையப்பெற்றுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன் தினமும் இஸ்ரேலிய இராணுவம் ஷெல் தாக்குதல் மேற்கொண்டது. இதன்போது 10 குழந்தைகள் உட்பட 16...
- Advertisement -spot_img

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...
- Advertisement -spot_img